Wednesday 22 March 2017

சேலம் மாநகரில்...! நடைபெற்ற...!
AITUC-யின்...! தமிழ்நாடு...!
தெரு வியாபாரத் தொழிலாளர் இணையத்தின்...! 
முதல் மாநில மாநாடு...!



AITUC-யின்... தமிழ்நாடு தெரு வியாபாரத் தொழிலாளர்
இணையத்தின்... முதல் மாநில மாநாடு... சேலம் மாநகரில்...,
2017 மார்ச் 20, 21 ஆகிய இரு நாட்களில் மிகச்
சிறப்பாக நடைபெற்றது.

2017 மார்ச் 20 திங்கட்கிழமை அன்று... மாநாட்டின் முதல்
நாள்... முதல் நிகழ்வாக... மாலை 05-00 மணிக்கு, சேலம் கோட்டை...
மைதானத்திலிருந்து... போஸ் மைதானம்... நோக்கி... பேரணி...
துவங்கியது. 3000-க்கும் மேற்பட்ட தோழர், தோழியர்கள்
&
பங்கேற்ற... இப் பேரணிக்கு... வரவேற்புக் குழுவின் பொருளாளர்
தோழர். ஆ. ஜீவானந்தம் தலைமை தாங்கினார்.

பேரணியினைத் தொடர்ந்து... மாலை 06-00 மணிக்கு...
பொது மாநாடு துவங்கியது. இப் பொது மாநாட்டிற்கு... AITUC-யின் 
சேலம் மாவட்ட பொது செயலாளர் தோழர். M. முனுசாமி 
தலைமை தாங்கினார்.

வரவேற்புக்குழுவின் செயலாளர் தோழர். V. ராஜேந்திரன்
வரவேற்புரை ஆற்ற...
&
AITUC-யின்... மாநில பொதுச் செயலாளர்...
தோழர். T.M. மூர்த்தி, தமிழ்நாடு தெரு வியாபாரத் தொழிலாளர்
இணையத்தின்... அமைப்பாளர் தோழர். C. சந்திரகுமார்
மற்றும்...  சேலம் மாவட்ட... இந்திய கம்யூனிஸ்ட்...
கட்சியின்... செயலாளர் தோழர். A. மோகன்
ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின்... தேசியக்குழு
உறுப்பினர்... தோழர். தா. பாண்டியன் நிறைவு பேரூரை
ஆற்றினார்.

இறுதியாக... தெரு வியாபாரத் தொழிலாளர்...
சங்கத்தின்... மாவட்ட தலைவர் தோழர். A. ஈஸ்வரன், நன்றி...
கூறி... பொது மாநாட்டை முடித்து வைத்தார்.

2017 மார்ச் 21 செவ்வாய்கிழமை அன்று... மாநாட்டின்...
2-ஆம் 
நாள்... 
முதல் நிகழ்வாக... காலை 09-00 மணிக்கு... பிரதிநிதிகள்...
மாநாட்டிற்கான தலைமைக்குழு... 
தோழர்கள்... தேர்வு...
செய்யப்பட்டனர்.

தேர்வு செய்யப்பட்ட தலைமைக் குழு தோழர்களான...
தோழர்கள். ராஜேந்திரன், தினகர மோகன், ராமசந்திரன், நந்தா சிங்
மற்றும் முஸ்திரி பேகம் ஆகியோர் தலைமை தாங்கினர்.

பிரதிநிதிகள் மாநாட்டின் முதல் நிகழ்வாக...
இணையத்தின் செங்கொடியினை AITUC-யின் சேலம்...
மாவட்ட தலைவர்... தோழர். K.A. வேணுகோபால்... ஏற்றி... வைக்க...,
வரவேற்புக் குழுவின்... தலைவர் தோழர். K. சுவாமிநாதன்
வரவேற்புரை ஆற்றினார்.

மாநாட்டினை துவக்கி வைத்து... AITUC-யின்...
மாநில பொதுச் செயலாளர் தோழர். T.M. மூர்த்தி, 
துவக்க
உரை... ஆற்றினார்.

NFTE மாவட்ட செயலர் தோழர். C. பாலகுமார், 
அகில இந்திய வங்கி ஊழியர் சங்கத்தின் மாவட்ட செயலர் தோழர். 
S. சம்பத் மற்றும் தமிழ்நாடு மின்சார தொழிலாளர்
&
சம்மேளனத்தின் மாநில இணை செயலாளர் 
தோழர். V. ராஜேந்திரன் ஆகியோர் 
வாழ்த்துரை வழங்கினர்.

இணையத்தின் செயல்பாட்டு அறிக்கையினை...
முன்மொழிந்து... தமிழ்நாடு தெரு வியாபாரத் தொழிலாளர்...
இணையத்தின் அமைப்பாளர் தோழர். C. சந்திரகுமார்
உரை ஆற்றினார்.

AITUC-யின் மாநில துணை பொதுச் செயலாளர் 
தோழர். K. ரவி நிறைவுரை ஆற்றினார்.

மாநாட்டில்... தெரு வியாபாரிகளுக்கான பல்வேறு...
தீர்மானங்கள் நிறைவேற்ற... புதிய நிர்வாகிகள் ஏகமனதாக...
தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

புதிய நிர்வாகிகள் முறையே:

மாநிலத் தலைவர்: தோழர். சந்திரகுமார், தஞ்சாவூர்.

மாநில பொது செயலாளர்: தோழர். ராஜேந்திரன், சேலம்.

மாநில பொருளர்: தோழர். முத்துக்குமரன், தஞ்சாவூர்.

இறுதியாக... வரவேற்புக்குழுவின் பொது செயலாளர் 
தோழர். V. ராஜேந்திரன் நன்றி கூற மாநாடு 
இனிதே நிறைவுற்றது.

நமது NFTE சங்கத்தின் சார்பில்... மாவட்ட செயலர்...
தோழர். C. பாலகுமார், மாநில உதவி செயலர் தோழர். G. வெங்கட்ராமன்,
மாநில சிறப்பு அழைப்பாளர்... தோழர். P. கஜேந்திரன், மாவட்ட 
பொருளர் தோழர். S. காமராஜ் மற்றும் மாவட்ட அமைப்பு 
செயலர் தோழர். S.R. செல்வராஜ்
&
உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட தோழர், தோழியர்கள்
பங்கேற்று சிறப்பித்தனர்.

No comments:

Post a Comment