Tuesday 7 February 2017

BSNL அனைத்து சங்க கூட்டமும்... முடிவுகளும்...


நமது BSNL அனைத்து ஊழியர்கள் மற்றும்
அதிகாரிகள் சங்க கூட்டம் 06-02-2017 அன்று BSNL MS சங்க
அலுவலகத்தில் நடைபெற்றது.

இக் கூட்டத்திற்கு... நமது NFTE பொதுச் செயலர் தோழர்.
C. சந்தேஷ்வர் சிங், தலைமை தாங்கினார். BSNLEU பொதுச் செயலர்
தோழர். P.அபிமன்யூ, நாம் எதிர் நோக்கியுள்ள பிரச்சனைகள்
மற்றும் சவால்களை எடுத்து உரைத்தார்.

அனைத்து சங்கத்தின் பொதுச் செயலர்கள் மற்றும் 
பிரதிநிதிகளின் ஆலோசனை மற்றும் 
கருத்து பதிவிற்கு பிறகு...

கீழ்க்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டன:
  • 2016 - 2017 ஆம் நிதியாண்டில் BSNL நிறுவனத்தின் வருவாயை மேம்படுத்த அனைத்து அதிகாரிகள் மற்றும் ஊழியர்களும் 10-02-2017 முதல் 31-03-2017 வரை தினமும் ஒரு மணி நேரம் கூடுதலாக பணி செய்து, விற்பனையை அதிகரிப்பது, சேவையை மேம்படுத்துவது என்று முடுவு எடுக்கப்பட்டுள்ளது.
மேலும்... கீழ்க்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி...:
  • BSNL நிறுவனத்தை தனியாருக்கு தாரை வார்க்கத் துடிக்கும் நிதி ஆயோக் பரிந்துரையை அமுல் படுத்தும் பிரதமர் அலுவலகத்தின் முயற்சியைக் கைவிடக்கோரி...
  • செல் கோபுரங்களைப் பிரித்து, தனி துணை நிறுவனம் அமைக்கும் முயற்சியை கைவிடக்கோரி...
  • 4-G அலைக்கற்றையை BSNL-க்கு இலவசமாக வழங்கக்கோரி...
  • Reliance Jio நிறுவனத்திற்கு சலுகைகள் காட்டும் அவலத்தை நிறுத்தக்கோரி...
2017 மார்ச் - 9 அன்று...
ஆளுநர் மாளிகை நோக்கி... மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி...
நகராட்சி அலுவலகம் நோக்கி... நாடு தழுவிய பேரணி... 
நடத்திட... முடிவு... எடுக்கப்பட்டுள்ளது.

தோழர்களே...! 
ஒன்றுபடுவோம்...!! போராடுவோம்...!!!
BSNL நிறுவனம் காப்போம்...! தேசம் காப்போம்...!!

No comments:

Post a Comment