Wednesday 7 December 2016

அஞ்சாமைக்கு..., ஆளுமைக்கு..., அஞ்சலி...


அஞ்சாமல் ஆட்சி செய்த...
அம்மையாரை காண்பது எப்போ...
அவருடைய தெளிவான...
அழகுத் தமிழ் கேட்பது எப்போ...

புன்சிரிப்பு பூத்து நிற்கும்...
பூ முகத்தை காண்பது எப்போ...
புகழ் பூத்த பெண்மணியே...
உன் புகழ் காண்பது எப்போ...

இந்தியாவில்..., இன்னொரு...,
இரும்பு பெண்மணியை..., காண்பது எப்போ...  
இந்திய அரசியலில்..., ஆணாதிக்க அரசியலில்...
இப்படி ஒரு பெண்ணை... காண்பது எப்போ...

பலமான கருத்து வேறுபாடுகள்..., இருந்தாலும்...,
பன்முகங்கள் பாராட்டும்..., பார் போற்றும்...,
உந்தன்..., செயல் ஆக்கம்..., காண்பது எப்போ...

ஆளுமை மிக்க அரசியல் தலைவியாய்...
ஆரையும், துணிவுடன் அணுகியே நின்றாய்...
போரிடும் வல்லமை கொண்டாய்...
காலனிடம் போராடியே... இன்னுயிர் இழந்தாய்...

அஞ்சாமையின் அடையாளமாக... ஆளுமையின் அடையாளமாக...
நின்ற..., தமிழக முதல்வர்..., செல்வி. ஜெ. ஜெயலலிதா 
அவர்களது மறைவிற்கு..., NFTE சேலம் மாவட்ட
சங்கத்தின்...,மனங்கசிந்த... அஞ்சலி...

No comments:

Post a Comment