Friday 2 December 2016

உரிமை மீட்புப் போராட்டத்திற்கு...
கிடைத்த... உத்திரவாதம்...





















நமது திருச்செங்கோடு SDCA பகுதிகளில்..., பணிபுரியும்...
ஊழியர்களை..., அடிமைப் படுத்தும் விதமாக..., தொடர்ந்து..., ஊழியர்
விரோதப் போக்கை கடைப்பிடிக்கும்..., தல மட்ட
நிர்வாகத்தை கண்டித்து...,

உரிமை மீட்பு மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம்... 
29-11-2016 செவ்வாய் கிழமை... அன்று... மதியம் 01-30 மணிக்கு,
திருச்செங்கோடு C - DOT தொலைபேசி நிலையத்தில் 
மிக எழுச்சியாக நடைபெற்றது.

இப் போராட்டத்திற்கு..., மாவட்ட தலைவர் தோழர். 
S.சின்னசாமி தலைமை தாங்கினார்.

மிகச் எழுச்சியாக துவங்கிய... கண்டன ஆர்ப்பாட்டத்தை...
திருச்செங்கோடு கிளை செயலர் தோழர். 
K.சதாசிவம் துவக்கி வைத்தார்.

மாவட்ட உதவிச் செயலர் தோழர். P.கஜேந்திரன் 
மற்றும் மாவட்ட பொருளர் தோழர். S.காமராஜ் ஆகியோர்
கண்டன உரை ஆற்றினர்.

மாவட்ட செயலர் தோழர். C.பாலகுமார் கண்டன 
சிறப்புரை ஆற்றினார்.

இறுதியாக... திருச்செங்கோடு கிளை உதவி செயலர் 
தோழர். P.குணசேகரன் I, நன்றி கூறி கண்டன 
ஆர்ப்பாட்டத்தை முடித்து வைத்தார்.

இந்த..., கண்டன ஆர்ப்பாட்டத்தில்..., 50-க்கும் மேற்பட்ட தோழர்...,
தோழியர்கள் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

ஆர்ப்பாட்டம் நடைபெற்ற..., 29-11-2016 அன்று...,
திருச்செங்கோடு கோட்டப் பொறியாளர் அவர்கள்..., சேலம்...,
பொது மேலாளர் அலுவலகத்தில் நடைபெற்ற காணொளி கூட்டத்தில்
பங்கேற்று, இருந்த..., நிலையில் 30-11-2016 அன்று பேச்சு 
வார்த்தைக்கு அழைப்பு விடுத்தார்.

அதனைத் தொடர்ந்து..., மாவட்ட சங்க வழிகாட்டுதல் படி...,
30-11-2016 அன்று மதியம் 01-00 மணிக்கு போராட்டக்குழு..., தல மட்ட...,
பிரச்சனையை மையப்படுத்தி, நிர்வாகத்துடன் 
பேச்சு வார்த்தை நடத்தியது.

சுமார்..., 2 மணி நேரம் நடைபெற்ற...,

இப் பேச்சு வார்த்தையில்..., நமது கோரிக்கையின் நியாயம்,
உணர்ந்த..., கோட்ட பொறியாளர்..., உரிய நடவடிக்கை எடுப்பதாக,
உறுதி மற்றும் உத்திரவாதம் அளித்ததின்..., அடிப்படையில்...,
நமது போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.

ஊழியர்களின்... உரிமை காத்திட... மீட்டிட...
நடைபெற்ற... போராட்டத்தில்... கலந்து கொண்ட தோழர்,
தோழியர்களுக்கும்..., உறுதி மற்றும் உத்திரவாதம்..., அளித்த...,
திருச்செங்கோடு..., கோட்ட நிர்வாகத்திற்கும்...,
நமது... நன்றி... பாராட்டுக்கள்...

No comments:

Post a Comment