Thursday 1 December 2016

மனுசங்கடா... நாங்க..., மனுசங்கடா...
மக்கள் கவிஞன்... இன்குலாப் மறைந்தார்...


மனுசங்கடா..., நாங்க மனுசங்கடா...
உன்னப் போல..., அவனப் போல..., எட்டுச்சாணு உயரமுள்ள...
மனுசங்கடா..., நாங்க மனுசங்கடா...

எங்களோட மானம் என்ன தெருவில கிடக்கா - உங்க...,
இழுப்புக்கெல்லாம் பணியுறதே எங்களின் கணக்கா
உங்களோட முதுகுக்கெல்லாம், இரும்புல தோலா
நாங்க ஊடு புகுந்தா, உங்க மானம் கிழிஞ்சு போகாதா

உங்க தலைவன் பொறந்த நாளு போஸ்டர் ஒட்டவும்
உங்க ஊர்வலத்தில் தர்ம அடிய வாங்கி கட்டவும் - அட
எங்க முதுகு நீங்க ஏறும் ஏணியாகவும் - நாங்க
இருந்தபடியே இருக்கணுமா காலம் பூராவும்

குளப்பாடி கிணத்து தண்ணி புள்ளய சுட்டது
தண்ணியும் தீயாச் சுட்டது - இந்த
ஆண்டைகளின் சட்டம் எந்த மிராசைத் தொட்டது

சதையும் எலும்பும் நீங்க வச்ச தீயில் வேகுது - உங்க
சர்க்காரும் கோர்ட்டும் அதுல எண்ணய ஊத்துது
எதைஎதையோ சலுகையின்னு அறிவிக்கிறீங்க - நாங்க
எரியும்போது எவன் மசுர புடுங்க போனீங்க - டேய்

மனுசங்கடா..., நாங்க மனுசங்கடா...
உன்னப் போல..., அவனப் போல..., எட்டுச்சாணு உயரமுள்ள...
மனுசங்கடா..., நாங்க மனுசங்கடா...
- இன்குலாப்...

என்ற அவரது..., உணர்ச்சிமிகு..., பாடல்...,
ஒடுக்கப்பட்டவர்களின்..., 
உரிமை கீதமாக...,
என்றென்றும் ஒலிக்கும்...,

மக்கள் கவிஞர்..., 
இன்குலாப் மறைவிற்கு...,
NFTE சேலம் மாவட்ட சங்கத்தின்...,
மனங்கசிந்த... அஞ்சலி...

No comments:

Post a Comment