கோரிக்கைகளில்... ஏற்பும்... மறுப்பும்...
13 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி...,
நமது NFTE தலைமையிலான NFBW கூட்டமைப்பு நாடு தழுவிய
ஆர்ப்பாட்டமும்.., தர்ணாவும் நடத்தி முடித்துள்ளது. இந்நிலையில்...,
நமது கோரிக்கைகள் மீதான, நிலைபாட்டை BSNL நிர்வாகம்
தனது 21-10-2016 தேதியிட்டக் கடிதத்தில் நமது மத்திய
சங்கத்திற்கு தெரியப்படுத்தியுள்ளது.
ஏற்கப்பட்டவை:
- போனஸ் 2014 - 2015 ஆம் ஆண்டுக்கு உத்திரவு வெளியிடப்பட்டு விட்டது. 2015 - 2016 ஆம் ஆண்டிற்கான போனஸ் வழங்குவது பற்றி பரிசீலிக்கப்படும்.
- 3-வது ஊதிய மாற்றக்குழு அமைப்பது பற்றி DPE மற்றும் DOT-யின் வழிகாட்டுதல்கள் பெறப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
- TM பயிற்சி முடித்து காத்திருப்போருக்கான பதவி உயர்வுக்கான ஒப்புதல் வழங்கப்பட்டு விட்டது. செங்கல்பட்டுப் பிரச்சனை சங்கங்களுடன் கலந்து ஆலோசித்த பின் முடிவெடுக்கப்படும்.
- விடுப்பைக் காசாக்கும் (LEAVE ENCASHMENT) வசதி DOT ஊழியர்கள் போலவே BSNL-லில் நியமனம் பெற்ற ஊழியர்களுக்கும் பொருந்தும்.
- BSNL நியமன ஊழியர்களுக்கான புதிய ஓய்வூதியத் திட்டம் DOT-யின் ஒப்புதல் பெற்று அமுல் படுத்தப்படும்.
- BSNL MRS மருத்துவத் திட்டத்தில் உள்ள குறைகளைக் களைவதற்காக அமைக்கப்பட்ட குழு நவம்பரில் கூடுகிறது. அதன் பின் உரிய திருத்தங்கள் செய்யப்படும்.
மறுக்கப்பட்டவை:
- 4-வது சனிக்கிழமை விடுமுறை என்பது ஏற்புடையதல்ல. வங்கி சேவைக்கும் தொலைத்தொடர்பு சேவைக்கும் மிக வித்தியாசம் உள்ளது.
- NEPP பதவி உயர்வில் SC / ST ஊழியர்களுக்கு இட ஒதுக்கீடு, தேர்வெழுதிப் பெற்ற பதவி உயர்வைக் கணக்கில் கொள்ளாமல் இருப்பது..., குறைவான ஊதிய நிலையில் பதவி உயர்வு அளிப்பது போன்றவற்றை பல முறை பேசி விட்டதால் புதிதாகப் பரிசீலிக்க இயலாது.
- தேக்கநிலை ஊதியம் பற்றி 3-வது ஊதியக்குழு முடிவெடுக்கும் .
- வணிகப்பகுதி உருவாக்கம் ஏறத்தாழ முடிவடைந்து விட்டது. எனவே சங்கங்களுடன் பேசுவதற்கு அவசியமில்லை.
- நன்னடத்தை விதி 55 ii (b) பற்றி ஏற்கனவே தெரிவிக்கப்பட்டு விட்டது.
இது... நிர்வாகத்தின்... நிலைபாடே தவிர... முடிவல்ல...,
கோரிக்கைகளில்... முன்னேற்றம்...
பெறும்வரை...,
நமது போராட்டம்... தொடரும்...
No comments:
Post a Comment