Friday 23 September 2016

TMTCLU... கோரிக்கை விளக்கக் கூட்டம்...


TMTCLU-வின் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்ட கோரிக்கைகள் குறித்து...,
நமது தமிழ் மாநில நிர்வாகத்துடன் நடைபெற்ற பேச்சு வார்த்தையின்
அடிப்படையில் "கோரிக்கை விளக்கக் கூட்டம்" 22-09-2016
வியாழக்கிழமை அன்று மாலை 05-00 மணிக்கு...,
நமது NFTE மாவட்ட சங்க அலுவலகத்தில்
நடைபெற்றது.

இக் கோரிக்கை விளக்க கூட்டத்திற்கு..., TMTCLU மாவட்ட தலைவர்
தோழர். N.சிவமோகன் தலைமை தாங்கினார்.

TMTCLU மாவட்ட உதவி செயலர் தோழர். P.செல்வம் வரவேற்புரை
ஆற்ற... TMTCLU மாவட்ட துணைத் தலைவர் தோழர். 
M.இசையரசன் அஞ்சலி உரை நிகழ்த்தினார்.

கோரிக்கைகளை விளக்கி... TMTCLU மாநில உதவி செயலர் 
தோழர். A.சண்முகசுந்தரம், NFTE மாவட்ட செயலர் தோழர். C.பாலகுமார்,
NFTE மாநில உதவி செயலர் தோழர். G.வெங்கட்ராமன் 
ஆகியோர் விளக்க உரை ஆற்றினர்.

இறுதியாக... TMTCLU மாவட்ட பொருளர் தோழர். G.செல்வராஜ்
நன்றி கூறி...  கூட்டத்தை முடித்து வைத்தார்.

இந்த கோரிக்கை விளக்க கூட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட தோழர்...,
தோழியர்கள் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

No comments:

Post a Comment