Saturday 10 September 2016

CMD  உடன்... சங்கத் தலைவர்கள்... சந்திப்பு...


08-09-2016 அன்று டெல்லியில் நமது CMD திரு. அனுபம் ஸ்ரீவத்சவா
அவர்களுடன் அனைத்து சங்கத் தலைவர்கள் சந்திப்பு...,
மற்றும் கருத்து பகிர்வு கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில்... NFTE, BSNLEU, TEPU, BSNLMS, பகுஜன், SNEA, AIBSNLEA
மற்றும் AIBSNLOA சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். நமது
NFTE சங்கத்தின் சார்பாக... அகில இந்திய பொருளர்
தோழர். ராஜ்மௌலி கலந்து கொண்டு பல்வேறு
ஆலோசனைகளை வழங்கினார்.

கூட்ட துளிகளில்... சில...

  • ரிலையன்ஸ் நிறுவனத்தின் JIO வருகையால் நமது நிறுவனம் சந்திக்க உள்ள சவால்கள் மற்றும் அதை சமாளிக்க நாம் எடுத்துள்ள முயற்சிகள் பற்றி விளக்கினார்.
  • நமது புதிய திட்டமான BB ULD 249 திட்டத்தை பிரபலப்படுத்த கோரினார்.
  • புதிய திட்டத்தால் ஏற்பட உள்ள வருவாய் இழப்புகளை சமாளிக்க..., புதிய இணைப்புகளை அதிகமாக பெற வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.
  • நமது நிறுவனம் தரமான சேவைகளை வழங்கினால் தான், போட்டிகளை சமாளிக்க முடியும் என்றும்..., நமது நிறுவனத்தில் பணியாற்றும் 2.10 லட்சம் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் அவர்கள் சார்ந்த குடும்பத்தை பாதுகாப்பதோடு இல்லாமல், நமது நிறுவனத்தையும் பாதுகாக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். 
  • ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கான 3-வது ஊதியக்குழு 2017-ல் வர இருப்பதால்..., இந்த நிதி ஆண்டு நமக்கு முக்கியமான நிதி ஆண்டாக நாம் கருத வேண்டும்..., எனவே நாம் அனைவரும் ஒன்றாக சேர்ந்து கடுமையாக உழைத்து, BSNL நிதி நிலைமையை உயர்த்துவதற்காக பாடுபட வேண்டும் என்று வலியுறுத்தினார்.
  • 2015-2016ம் ஆண்டிற்காண செயல்பாட்டு லாபம் ரூ.3855/- கோடி என்றும் நடப்பு நிதியாண்டில் நிகர நட்டம் ரூ.3500/- கோடியாக குறைக்கப் பட்டுள்ளதாகவும் தகவல் தெரிவித்தார்.

வரப்புயர நீர் உயரும்... நீர் உயர நெல் உயரும்...
நெல் உயர குடி உயரும்... குடி உயர கோல் உயரும்...
கோல் உயர கோன் உயர்வான்...
என்ற பாடலுக்கு ஏற்ப...,
BSNL நிறுவனம் உயர... நாம் உயர்வோம்...

எனவே..., BSNL நிறுவனத்தின் புதிய அதிரடி திட்டத்தை...
வேகமாக பொது மக்களிடத்தில் கொண்டு சென்று
புதிய இணைப்புகளை அதிகமாக பெற்று
வருவாயை அதிகப் படுத்துவோம்.
நம் BSNL நிறுவனத்தை உயரச் செய்வோம்...
நாமும் உயர்ந்து நிற்போம்...

No comments:

Post a Comment