NFBW கூட்டமைப்பு சார்பாக...
நமது சேலம் மாவட்டத்தில் நடைபெற்ற...
பெருந்திரள் தர்ணா போராட்டம்...
போனஸ் வழங்குதல்... ஊதியக்குழு உருவாக்குதல்... மற்றும்
BSNL உள்ளிட்ட பொதுத்துறைகளை விற்கத்துடிக்கும் நிதி ஆயோக்கின்
மோசமான பரிந்துரையை கண்டித்து 12-08-2016 வெள்ளிக்கிழமை
அன்று காலை 10.00 மணிக்கு சேலம் பொது மேலாளர்
அலுவலகம் முன்பாக மாபெரும் பெருந்திரள்
தர்ணா போராட்டம் மிகச் சிறப்பாக
நடைபெற்றது.
இந்த தர்ணா போராட்டத்திற்கு... NFTE மாவட்ட தலைவர்...
தோழர். S.சின்னசாமி, TEPU மாவட்ட தலைவர் தோழர். P.அன்பழகன்,
SEWA-BSNL மாவட்ட தலைவர் தோழர். R.மாதையன்
ஆகியோர் கூட்டுத் தலைமை தாங்கினர்.
மிக எழுச்சியாக துவங்கிய... தர்ணா போராட்டத்தை...
NFTE மாநில உதவி செயலர் தோழர். G.வெங்கட்ராமன் துவக்கி
வைத்து..., சிறப்புரை ஆற்றினார்.
கோரிக்கைகளை விளக்கி...
NFTE மாவட்ட செயலர் தோழர். C.பாலகுமார், TEPU மாவட்ட செயலர்
தோழர். P.கிருஷ்ணமூர்த்தி, SEWA-BSNL மாவட்ட செயலர்
தோழர். G.மணிவண்ணன், NFTE மாநில சிறப்பு அழைப்பாளர்
தோழர். P.கஜேந்திரன் மற்றும் SEWA-BSNL மாநில துணைத் தலைவர்
தோழர். S.பன்னீர்செல்வம் ஆகியோர் கண்டன
சிறப்புரை ஆற்றினர்.
இறுதியாக... NFTE மாவட்ட பொருளர் தோழர். S.காமராஜ் நன்றி
கூறி... தர்ணா போராட்டத்தை முடித்து வைத்தார்.
இந்த தர்ணா போராட்டத்தில் 250-க்கும் (25 பெண்கள் உள்பட)
மேற்பட்ட தோழர், தோழியர்கள் திரளாக கலந்து கொண்டு
சிறப்பித்தனர். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில்
இருந்து தர்ணா போராட்டத்தில் கலந்து கொண்ட அனைத்து
தோழர், தோழியர்களுக்கும் சேலம் மாவட்ட NFBW
கூட்டமைப்பின் சார்பாக நன்றியை
தெரிவித்துக் கொள்கிறோம்.
No comments:
Post a Comment